Malarukku Thendral Song Lyrics

மலருக்குத் தென்றல் பாடல் வரிகள்

Enga Veettu Pillai (1965)
Movie Name
Enga Veettu Pillai (1965) (எங்க வீட்டுப் பிள்ளை)
Music
Viswanathan Ramamoorthy
Singers
L. R. Eswari, P. Susheela
Lyrics
வானகமே வையகமே வளர்ந்து வரும் தாயினமே
ஆணுலக மேடையிலேஆசை நடை போடாதே ..
ஆசை நடை போடாதே

மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

பறவைக்குச் சிறகு பகையானால்
அது பதுங்கி வாழ்ந்திடக் கால்களுண்டு
பறவைக்குச் சிறகு பகையானால்
அது பதுங்கி வாழ்ந்திடக் கால்களுண்டு
உறவுக்கு நெஞ்சே பகையானால்
மண்ணில் உயிரினம் பெருகிட வகை ஏது
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

படகுக்குத் துடுப்பு பகையானால்
அங்கு பாய்மரத்தாலே உதவியுண்டு
படகுக்குத் துடுப்பு பகையானால்
அங்கு பாய்மரத்தாலே உதவியுண்டு
கடலுக்கு நீரே பகையானால்
அங்கு கதை சொல்லும் அலைகளுக்கிடமேது
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

கண்ணுக்குப் பார்வை பகையானால்
அது கருத்தால் உணர்ந்திட வழியுண்டு
பெண்ணுக்குத் துணைவன் பகையானால்
அந்தப் பேதையின் வாழ்வில் ஒளி ஏது
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு