Summa Kedandha Song Lyrics

சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி பாடல் வரிகள்

Nadodi Mannan 1958 (1958)
Movie Name
Nadodi Mannan 1958 (1958) (நாடோடி மன்னன்)
Music
S. M. Subbaiah Naidu
Singers
P. Bhanumathi, T. M. Soundararajan
Lyrics
S. M. Subbaiah Naidu
சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி
சோம்பலில்லாமே ஏர் நடத்தி 

சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி
சோம்பலில்லாமே ஏர் நடத்தி
கம்மாக் கரைய ஒசத்திக் கட்டி
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டி 

சம்பாப் பயிரைப் பறிச்சு நட்டு
தகந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு வெளைஞ்சிருக்கு வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு 
நெல்லு வெளைஞ்சிருக்கு வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு அட
காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு
கையுங் காலுந்தானே மிச்சம்
கையுங் காலுந்தானே மிச்சம்
காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு
கையுங் காலுந்தானே மிச்சம்
கையுங் காலுந்தானே மிச்சம்

இப்போ காடு வெளையட்டும் பொண்ணே நமக்கு
காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னே
காடு வெளையட்டும் பொண்ணே நமக்கு
காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னே

மண்ணைப் பொளந்து சொரங்கம் வெச்சு
பொன்னை எடுக்க கனிகள் வெட்டி
மண்ணைப் பொளந்து சொரங்கம் வெச்சு
பொன்னை எடுக்க கனிகள் வெட்டி 

மதிலு வெச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்
மதிலு வெச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தை எடுக்கும் 

வழி காட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும் ரொம்ப
கிட்ட நெருங்குது நேரம் கிட்ட நெருங்குது நேரம் 
அவர் பட்ட துயரினிமாறும் ரொம்ப
கிட்ட நெருங்குது நேரம் கிட்ட நெருங்குது நேரம்
அட காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு
கையுங் காலுந்தானே மிச்சம் 
கையுங் காலுந்தானே மிச்சம்

காடு வெளையட்டும் பொண்ணே நமக்கு
காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னே 

மாடா ஒழைச்சவன் வாழ்க்கையிலே பசி
வந்திடக் காரணம் என்ன மச்சான்

அவன் தேடிய செல்வங்கள் வேற இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி 

பஞ்சப் பரம்பரை வாழ்வதற்கு இனி
பண்ண வேண்டியது என்ன மச்சான் 

தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி 

வாடிக்கையாய் வரும் துன்பங்களை இன்னும்
நீடிக்கச் செய்வது மோசமன்றோ 

இருள் முடிக் கிடந்த மனமும் வெளுத்தது 
சேரிக்கும் இன்பம் திரும்புமடி 
இனி சேரிக்கும் இன்பம் திரும்புமடி 

அட காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு
கையுங் காலுந்தானே மிச்சம் 
கையுங் காலுந்தானே மிச்சம்

நானே போடப்போறேன் சட்டம் பொதுவில்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம் 

நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்

வாழை கெளைக்குது சோலை தழைக்குது 
ஏழைகளுக்கதில் என்ன கிடைக்குது
கூழைக் குடிக்குது நாளைக் கழிக்குது
ஓலைக் குடிசையில் ஒண்டிக் கெடக்குது

நல்லவர் ஒன்றாய் இணைந்து விட்டால் மீதம் 
உள்ளவரின் நிலை என்ன மச்சான்

நாளை வருவதை எண்ணி எண்ணி அவர்
நாழிக்கு நாழி தெளிவாரடி