Pani Thuli artwork

Song lyrics

Pani Thuli

பனி துளி பனி துளி பனி துளி

38699 views

Singer · KK, Shreya Ghoshal, Tanvi Shah

Lyrics · Thamarai

The lyrics

கரு கரு கரு கரு 
கண்ணு பட்டு ... 
வாடிவிடும் வாசமல்லி 
சந்தனத்தை பூசிவிடுங்க 
அடுத்தது அடுத்தது ... 
எப்போவென்னு மாமியாரு கேட்கும் முன்னே..? 
அரை டஜன் பெத்து கொடுங்க....!! 

தக தக தக தக 
தங்க சிலை தவிக்குது 
வெக்கதில போதும் அதை விட்டுவிடுங்க!! 
ஆரிராரோ ஆரிராரோ நாளைக்கின்னு 
தேவைப்படும் தாலாட்டுல 
ஒன்னு ரெண்டு கத்துகொடுங்க... 

உன் பனி துளி பனி துளி பனி துளி 
என்னை சுடுவது சுடுவது ஏனோ..? 
என் சூரியன் சூரியன் சூரியன் 
அதில் உருகுது உருகுது ஏனோ..? 
இது நனவாய் தோன்றும் கனவு 
இது காலையில் தோன்றும் நிலவு 
இது கண்ணை கண்ணை பரித்து 
வெளிச்சம் தரும் இரவு 

காதலா காதலா எண்ணவும் கூசுதே 
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே.. 

உன் பனி துளி பனி துளி பனி துளி 
என்னை சுடுவது சுடுவது ஏனோ..? 
என் சூரியன் சூரியன் சூரியன் 
அதில் உருகுது உருகுது ஏனோ..? 

கரு கரு கரு கரு 
கண்ணு பட்டு ... 
வாடிவிடும் வாசமல்லி 
சந்தனதை பூசிவிடுங்க 
அடுத்தது அடுத்தது ... 
எப்போவென்னு மாமியாரு கேட்கும் முன்னே..? 
அரை டஜன் பெத்து கொடுங்க....!! 

தக தக தக தக 
தங்க சிலை தவிக்குது 
வெக்கதில போதும் அதை விட்டுவிடுங்க!! 
ஆரிராரோ ஆரிராரோ நாளைக்கின்னு 
தேவைப்படும் தாலாட்டுல 
ஒன்னு ரெண்டு கத்துகொடுங்க... 

விரல்களும் நகங்களும் 
தொட்டு கொண்ட நேரங்கள் 
எண்ணி அதை பார்த்ததில்லை 
என்ற போதும் நூறுகள் 
ஏதோ ஒரு தென்றல் மோதி 
மெல்ல மெல்ல மாறினோம் 
ஓ... உன்னை நானும் என்னை நீயும் எங்கே என்று தேடினோம்..? 
நம்மை சுற்றி கூட்டம் வந்தும் தனியானோம்
தனிமையில் நெஞ்சுக்குளே பேசலானோம் 
பேசும் போதே பேசும் போதே
மௌனம் ஆனோம்!! 

உன் பனி துளி பனி துளி பனி துளி 
என்னை சுடுவது சுடுவது ஏனோ..? 
என் சூரியன் சூரியன் சூரியன் 
அதில் உருகுது உருகுது ஏனோ..? 

முகத்திரைகுள்ளே நின்று.. 
கண்ணாம் பூச்சி ஆடினாய்.. 
பொய்யால் ஒரு மாலை கட்டி .. 
பூசை செய்து சூடினாய் 

நிழல்களின் உள்ளே உள்ள 
நிஜங்களை தேடினேன் 
நீயாய் அதை சொல்வாய் 
என்று நித்தம் உன்னால் வாடினேன் 

சொல்ல நினைத்தேன் ஆனால் வார்த்தை இல்லை 
உன்னை விட்டால் யாரும் எந்தன் சொந்தம் இல்லை 
சொந்தம் என்று யாரும் இனி தேவை இல்லை... 

உன் பனி துளி பனி துளி பனி துளி 
என்னை சுடுவது சுடுவது ஏனோ..? 
என் சூரியன் சூரியன் சூரியன் 
அதில் உருகுது உருகுது ஏனோ..? 
இது நனவாய் தோன்றும் கனவு 
இது காலையில் தோன்றும் நிலவு 
இது கண்ணை கண்ணை பரித்து 
வெளிச்சம் தரும் இரவு 

காதலா காதலா எண்ணவும் கூசுதே 
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே.. 

உன் பனி துளி பனி துளி பனி துளி 
என்னை சுடுவது சுடுவது ஏனோ..? 
என் சூரியன் சூரியன் சூரியன் 
அதில் உருகுது உருகுது ஏனோ..?
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kanda Naal Mudhal

Keep listening

More from this movie

  1. Kanda Naal Mudhalai கண்ட நாள் முதலாய்

    Sung by Subhiksha, Pooja

  2. Merke Merke மேற்கே மேற்கே

    Sung by Sadhana Sargam, Shankar Mahadevan

  3. Pani Thuli பனி துளி பனி துளி பனி துளி

    Sung by KK, Shreya Ghoshal, Tanvi Shah