Kallanalum Kanavan Song Lyrics

கல்லானாலும் கணவன் தான்டி பாடல் வரிகள்

Mappillai Sir (1988)
Movie Name
Mappillai Sir (1988) (மாப்பிளை சார்)
Music
Shankar-Ganesh
Singers
Malasiya Vasudevan
Lyrics
Idhaya Chandran
கல்லானாலும் கணவன் தான்டி நான்
புல்லானாலும் புருஷன் தான்டி அடியேய்...
கல்லானாலும் கணவன் தான்டி நான்
புல்லானாலும் புருஷன் தான்டி

அஞ்சு நான் வளையல அம்பதுல வளைக்கிறே
இதுக்கு மேலே முறுக்கிகிட்டா தெரியும் சேதி கெழவி
கல்லானாலும் கணவன் தான்டி நான்
புல்லானாலும் புருஷன் தான்டி அடியேய்...

பத்மினிய உனக்கு தெரியுமா
என்ன காதலிச்ச விஷயம் புரியுமா
பானுமதியைக் கேட்டுப் பாருடி
அவங்க ஏங்கி நின்ன கதையைக் கேளடி

இந்த மீசை கொஞ்சம் வெள்ளை அது ப்ளஸ் பாய்ன்ட்டுடி
இப்ப கூட பல பெண்கள் என்னை சுத்துறாங்கடி
ராதா கூட என்னப் பார்க்க தூது விட்டா நேத்து
அனுராதா கூட என்னப் பார்க்க தூது விட்டா நேத்து
நானும் உன்னக் கட்டிக்கிட்டேன் வாலிபமே வேஸ்ட்டு

கல்லானாலும் கணவன் தான்டி நான்
புல்லானாலும் புருஷன் தான்டி
அஞ்சு நான் வளையல அம்பதுல வளைக்கிறே
இதுக்கு மேலே முறுக்கிகிட்டா தெரியும் சேதி கெழவி

கல்லானாலும் கணவன் தான்டி நான்
புல்லானாலும் புருஷன் தான்டி....

வயசுல என்ன இருக்கு என் மனசுல தெம்பு இருக்கு
ஒடம்புதான் கொஞ்சம் பெருசு அது பரம்பர தந்த பரிசு
அமலாவும் கமலாவும் என்னத் தேடுறாங்கடி
நதியாவும் சரிதாவும் அங்க வாடுறாங்கடி
எங்க அப்பன் பாட்டன் வம்சத்துக்கு ரெண்டு வீடுதான்டி
நான் ராமன் போல மாட்டிக்கிட்டேன் ஒத்த வீடுதான்டி
அது சொத்த வீடுதான்டி அது சொத்த வீடுதான்டி...

கல்லானாலும் கணவன் தான்டி நான்
புல்லானாலும் புருஷன் தான்டி
அஞ்சு நான் வளையல அம்பதுல வளைக்கிறே
இதுக்கு மேலே முறுக்கிகிட்டா தெரியும் சேதி கெழவி

கல்லானாலும் கணவன் தான்டி நான்
புல்லானாலும் புருஷன் தான்டி...ஹோய்.....