Kangal Engey Song Lyrics

கண்கள் எங்கே பாடல் வரிகள்

Karnan (1964)
Movie Name
Karnan (1964) (கர்ணன்)
Music
Viswanathan Ramamoorthy
Singers
P. Susheela
Lyrics
Kannadasan
கண்கள் எங்கே... நெஞ்சமும் எங்கே...
கண்ட போதே... சென்றன அங்கே...

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே 
கண்ட போதே சென்றன அங்கே ( இசை )

கால்கள் இங்கே மேனியும் இங்கே 
கால்கள் இங்கே மேனியும் இங்கே
காவலின்றி வந்தன இங்கே ஆ... ஆ... ஆ...

{ கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே 
கண்ட போதே சென்றன அங்கே }

{ ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... } 

ஆ... ஆ.... ( இசை ) ஆ... ஆ.... 

ஆ... ஆ.... ஆ... ஆ.... 

மணி கொண்ட கரமொன்று
அனல் கொண்டு வெடிக்கும்
அனல் கொண்டு வெடிக்கும்

ஆ... ஆ.... 
மணி கொண்ட கரமொன்று
அனல் கொண்டு வெடிக்கும்
அனல் கொண்டு வெடிக்கும்
மலர் போன்ற இதழ் இன்று
பனி கண்டு துடிக்கும் ( இசை )

மலர் போன்ற இதழ் இன்று
பனி கண்டு துடிக்கும்
துணை கொள்ள அவனின்றி 
தனியாக நடிக்கும்
துயிலாத பெண்மைக்கு ஏனிந்த மயக்கம்
ஆ... ஆ.... ஆ... ஆ.... 
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே 
கண்ட போதே சென்றன அங்கே 
கண்கள் எங்கே... ( இசை )

ஆ... ஆ.... ( இசை ) ஆ... ஆ.... ( இசை )
ஆ... ஆ.... ஆ... ஆ.... 

இனமென்ன குலமென்ன குணமென்ன அறியேன்
குணமென்ன அறியேன்
ஆ... ஆ.... 

ஈடொன்றும் கேளாமல் 
எனை அங்கு கொடுத்தேன் 
குடை கொண்ட மதயானை 
உயிர் கொண்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு 
நான் இங்கு மெலிந்தேன்
ஆ... ஆ.... ஆ... ஆ.... 
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே 
கண்ட போதே சென்றன அங்கே 
கண்கள் எங்கே...