Kannae Kalai Song Lyrics

கண்ணே கலைமானே பாடல் வரிகள்

Moondram Pirai (1982)
Movie Name
Moondram Pirai (1982) (மூன்றாம் பிறை)
Music
Ilaiyaraaja
Singers
K. J. Yesudas
Lyrics
Kannadasan
...இசை...

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே

...இசை...

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ

...இசை...

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் எங்கும் என் சன்னதி

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ...

By : ராஜா