Nillatha Vennila Song Lyrics

நில்லாத வெண்ணிலா பாடல் வரிகள்

Aanazhagan (1995)
Movie Name
Aanazhagan (1995) (ஆணழகன்)
Music
Ilaiyaraaja
Singers
Ilaiyaraaja, Swarnalatha
Lyrics
Vaali
ஆண் : நில்லாத வெண்ணிலா
நில்லு நில்லு என் காதலி
சொல்லாத பொன்மொழி
சொல்லு சொல்லு உன் கண் வழி
நில்லாமலே…..நீ போவதேன்
சொல்லாமலே நான் நோவதேன் ஏன்

பெண் : நில்லாத வெண்ணிலா
நில்லு நில்லு என் வாசலில்
சொல்லாத பொன்மொழி
சொல்லு சொல்லு உன் பார்வையில்……

ஆண் : மான் துள்ளும் மலையாளத்தின்
எழில் சித்திரமே சித்திரமே
வாழையும் இளநீரையும் கொண்ட
நன்னிலமே நன்னிலமே

பெண் : கேரளக் குயில் கூவிடும் இசை
தித்தித்ததோ…….தித்தித்ததோ…..
ஆவணி திருவோணத்தில் உன்னை
சந்தித்ததோ……சந்தித்ததோ…….

ஆண் : பொன்னல்லோ சிறு பூவல்லோ
மெல்ல தொடவோ என்னைத் தரவோ

பெண் : தேனல்லோ பசும்பாலல்லோ
பக்கம் வரவோ நான் தரவோ

ஆண் : செம்மீன்கள் துள்ளுதே
இங்கும் அங்கும் கண் ஓடையில்

பெண் : சந்தோஷம் பொங்குதே
முன்னும் பின்னும் உன் கூடலில்
நான்……சொல்லவோ…..
சின்ன பூவல்லவோ

ஆண் : நில்லாத வெண்ணிலா
நில்லு நில்லு என் காதலி
சொல்லாத பொன்மொழி
சொல்லு சொல்லு உன் கண் வழி

பெண் : நில்லாமலே…..நீ போவதேன்
சொல்லாமலே…….நான் நோவதேன் ஏன்

ஆண் : நில்லாத வெண்ணிலா
நில்லு நில்லு என் காதலி
சொல்லாத பொன்மொழி
சொல்லு சொல்லு உன் கண் வழி

பெண் : நீ வர எதிர்ப்பார்த்தது
இந்த நந்தவனம் நந்தவனம்
நீ தொட இங்கு பூத்தது
இந்த செங்கமலம் செங்கமலம்

ஆண் : காமனின் கலைக் காண்பது
இந்த அந்தப்புரம் அந்தப்புரம்
பூமரக் குயில் கூவுது
இங்கு ஸப்தஸ்வரம் ஸப்தஸ்வரம்

பெண் : மஞ்சமே இந்த நெஞ்சமே
சுகம் பஞ்சமோ இனி கொஞ்சமோ

ஆண் : உள்ளமே இன்ப வெள்ளமே
உன்னை அள்ளவோ அள்ளிச் செல்லவோ

பெண் : அன்றாடம் சேர்வது
மன்னா மன்னா உன் பொன்மடி

ஆண் : எந்நாளும் இன்பமே
நீயே நீயே என் பைங்கிளி
பூ……மங்கையே……பொங்கிடும் கங்கையே….

பெண் : நில்லாத வெண்ணிலா
நில்லு நில்லு என் காதலி
சொல்லாத பொன்மொழி
சொல்லு சொல்லு உன் பார்வையில்

ஆண் : நில்லாமலே…..நீ போவதேன்
சொல்லாமலே நான் நோவதேன் ஏன்

பெண் : நில்லாத வெண்ணிலா
நில்லு நில்லு என் வாசலில்
சொல்லாத பொன்மொழி
சொல்லு சொல்லு உன் பார்வையில்……