Konjum Pura Song Lyrics

கொஞ்சும் புறா இந்த கோடை நிலா பாடல் வரிகள்

Aanazhagan (1995)
Movie Name
Aanazhagan (1995) (ஆணழகன்)
Music
Ilaiyaraaja
Singers
Mano, S. Janaki
Lyrics
Vaali
பெண் : கொஞ்சும் புறா இந்த கோடை நிலா
நெஞ்சில் கோலம் போட்டதோ
கண்ணில் உலா வரும் காதல் கனா
உந்தன் கானம் கேட்டதோ
மீண்டும் பொன் மாலையில் மீட்டிட வேண்டும்
ஓர் மாணிக்க வீணை

ஆண் : கொஞ்சும் புறா இந்த கோடை நிலா
நெஞ்சில் கோலம் போட்டதோ
கண்ணில் உலா வரும் காதல் கனா
உந்தன் கானம் கேட்டதோ

பெண் : எண்ணிரண்டு வயதில் நான் ஏங்கிட
கண் இரண்டும் இமைகள் மூடுமா
நள்ளிரவில் எனது நூலாடையில்
பள்ளி கொள்ளும் தருணம் கூடுமா

ஆண் : ராதைப் பெண்ணே காதல் மன்னன்
போதைக்கேற்ற மாயக் கண்ணன்
ஜாலம் காட்டுவான்
பெண் : ஹஹஹாஹ்
ஆண் : ஆணிப் பொன்னின் அங்கம் எங்கும்
ஆசை வெள்ளம் பொங்கும் வண்ணம்
கோலம் தீட்டுவான்

பெண் : பறிக்கச் சொல்லுது
இந்த பவள மல்லிகை
வா வா அதிகாலையும் மாலையும்
வீசும் இதன் ஆனந்த வாசம்

ஆண் : கொஞ்சும் புறா இந்த கோடை நிலா
நெஞ்சில் கோலம் போட்டதோ
மீண்டும் பொன் மாலையில் மீட்டிட வேண்டும்
ஓர் மாணிக்க வீணை

ஆண் : கொஞ்சும் புறா இந்த கோடை நிலா
நெஞ்சில் கோலம் போட்டதோ

ஆண் : பெண்ணுக்குள்ளே அழகி நீ தான் என
கண்ணுக்குள்ளே மயக்கம் தோன்றுதே
அத்தி மரக் கனியும் நீ தான் என
கொத்தித் தின்ன இளமை தூண்டுதே

பெண் : ஆடை சுற்றும் கோயில் தெப்பம்
கூடச் சுற்ற கோடை வெப்பம் தீர்ந்து போகுமா
ஆளைத் தொட்டும் தோளைத் தொட்டும்
காளை கட்டும் காதல் மெட்டும் தேவ கானமா

ஆண் : கலைந்திடாமலே இந்த கானம் வாழுமே
நாளும் இள மாலையில் வாலிபம்
ஓதும் இந்த மன்மத வேதமே

பெண் : கொஞ்சும் புறா இந்த கோடை நிலா
நெஞ்சில் கோலம் போட்டதோ

ஆண் : கண்ணில் உலா வரும் காதல் கனா
உந்தன் கானம் கேட்டதோ

பெண் : மீண்டும் பொன் மாலையில்
மீட்டிட வேண்டும்
ஓர் மாணிக்க வீணை

ஆண் : கொஞ்சும் புறா இந்த கோடை நிலா
நெஞ்சில் கோலம் போட்டதோ

பெண் : கண்ணில் உலா வரும் காதல் கனா
உந்தன் கானம் கேட்டதோ