Orumuri Enthan artwork

Song lyrics

Orumuri Enthan

ஓரு முறை எந்தன்

24685 views

Singer · S. P. Balasubramaniam

Lyrics · Vairamuthu

The lyrics

ஆண் : ஓரு முறை எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ...

ஆண்குழு : திலோத்தமா

ஆண் : இருதயம் உந்தன் பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ...

ஆண்குழு : திலோத்தமா

ஆண் : ஆயிரம் கனவுகள் அம்மம்மா
தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும்
களைபவன் நானம்மா

***

ஆண் : இதயம் இப்போது கண்ணில் துடிக்குதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
கண்கள் மூடாமல் கனவு தோன்றுதே

பெண்குழு : என்ன

பெண் : இரவு இப்போது நீளம் ஆனதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
ஜன்னலில் நிலவு சண்டை போடுதே

ஆண்குழு : என்ன

ஆண் : எதிலும் உந்தன் பிம்பம் தோன்றுதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
என் பேர் இப்போது மறந்து போனதே

பெண்குழு : என்ன

பெண் : வானம் இப்போது பக்கம் வந்ததே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
தூக்கம் உன்னாலே தூரம் ஆனதே

ஆண்குழு : என்ன

ஆண் : ஓஹோ... ஒரு கடலினிலே நதி கலந்த பின்னே
அது பிரிவதில்லை

பெண் : ஓஹோ... ஒரு கவிதையிலே வந்து கலந்த பின்னே
சொல்லும் அறிவதில்லை

ஆண் : ஒரு முறை எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ...

ஆண்குழு : திலோத்தமா

ஆண் : இருதயம் உந்தன் பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ...

ஆண்குழு : திலோத்தமா


***

ஆண் : காற்றே இல்லாமல் வாழ்க்கை என்பதே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
காதல் கொள்ளாத ஜீவன் பூமியில்

பெண்குழு : இல்லை

பெண் : கண்கள் இல்லாமல் காட்சி என்பதே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
கனவே இல்லாமல் நிலவு என்பதே

ஆண்குழு : இல்லை

ஆண் : தண்ணீர் இல்லாமல் எந்த மீனும்
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
தலைவி இல்லாமல் காதல் காவியம்

பெண்குழு : இல்லை

பெண் : மண்ணை தொடாத மழையும் வானிலே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
உன்னைத் தொடாமல் உறவு என்பதும்

ஆண்குழு : இல்லை

ஆண் : ஓஹோ.. இந்த இயற்கையெல்லம்
நம் இருவரையும் கண்டு மலைத்ததென்ன

பெண் : ஓஹோ.. இது காதலுக்கே உள்ள ஜீவ குணம்
இதில் கலக்கமென்ன

ஆண் : ஒரு முறை எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ...

ஆண்குழு : திலோத்தமா

ஆண் : இருதயம் உந்தன் பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ...

ஆண்குழு : திலோத்தமா

{ஆண் : ஆயிரம் கனவுகள் அம்மம்மா
தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும்
களைபவன் நானம்மா
 
← Back to Aasai

Keep listening

More from this movie

  1. Orumuri Enthan ஓரு முறை எந்தன்

    Sung by S. P. Balasubramaniam

  2. Meenamma Athikalai மீனம்மா அதிகாலையிலும்

    Sung by S. P. Balasubramaniam

  3. Pullvizhi Pullvizhi புல்வெளி புல்வெளி

    Sung by K. S. Chithra

  4. Konja Naal Poru கொஞ்சநாள் பொறு தலைவா

    Sung by Hariharan, Sujatha

  5. Shock Adikuthu ஷொக்க் அடிக்குது

    Sung by Pragash, Sujatha, Suresh Peter