Meenamma Athikalai artwork

Song lyrics

Meenamma Athikalai

மீனம்மா அதிகாலையிலும்

295280 views

Singer · S. P. Balasubramaniam

Lyrics · Vairamuthu

The lyrics

ஆண் : மீனம்மா...
அதிகாலையிலும் அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே

பெண் : அம்மம்மா முதல் பார்வையிலே
சொன்ன வார்த்தையில் தான் ஒரு காவியமே

ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும்
சின்னச் சின்ன மோதல்களும்
மின்னல் போல வந்து வந்து போகும்

பெண் : மோதல் வந்து ஊடல் வந்து
முட்டிக் கொண்டபோதும்
இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்

ஆண் : இது மாதங்கள் நாட்கள் செல்ல

பெண் : ஆ...

ஆண் : நிறம் மாறிடும் பூக்கள் அல்ல..

பெண் : ஆ...

ஆண் : மீனம்மா...
அதிகாலையிலும் அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே

***

ஆண் : ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்தைக்கோர்
புது வித்தை காட்டிடவா..

பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பார்ப்பதற்கு
அதை மூடாமல் தாழ் போடாமல்
எனைத் தொட்டுத் தீண்டுவதா

ஆண் : மாமங்காரன் தானே மாலை போட்டு தானே
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய்
தொடலாம்
மீனம்மா...மழை உன்னை நனைக்கும்
இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும்

பெண் : அம்மம்மா வெயில் உன்னை அணைத்தால்
இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும் (இசை)

ஆண் : துத் துத் துது... துத்
துதுது..துத் துத் துது... துது

இரு : துத் துத் துது... துத்
துதுது..துத் துத் துது... துது

***

ஆண் : அன்று காதல் பண்ணியது
உந்தன் கன்னம் கிள்ளியது
அடி இப்போதும் நிறம் மாறாமல்
இந்த நெஞ்சில் நிற்கிறது

பெண் : அங்கு பட்டுச் சேலைகளும்
நகை நட்டும் பாத்திரமும்
உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே
அது கண்ணில் நிற்கிறது

ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே பேசலாம்
முதல் நாள் இரவு (இசை)

ஆண் : துத் துத் துது... துத்
துதுது..துத் துத் துது... துது

ஆண் : மீனம்மா...
உன்னை நேசிக்கவும் அன்பு வாசிக்கவும்
தென்றல் காத்திருக்கு

பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து
புஷ்பம் பூத்திருக்கு

ஆண் : உன்னை தொட்ட தென்றல் வந்து என்னை தொட்டு
என்னென்னவோ சங்கதிகள் சொல்லி விட்டு போக

பெண் : உன் மனமும் என் மனமும் ஒன்றையொன்று
ஏற்றுகொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட

ஆண் : இன்று மோகனம் பாட்டெடுத்தோம்

பெண் : ஆ..ஆ...

ஆண் : முழு மூச்சுடன் காதலித்தோம்

பெண் : ஆ..ஆ...

ஆண் : மீனம்மா...
அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே (இசை)
← Back to Aasai

Keep listening

More from this movie

  1. Orumuri Enthan ஓரு முறை எந்தன்

    Sung by S. P. Balasubramaniam

  2. Meenamma Athikalai மீனம்மா அதிகாலையிலும்

    Sung by S. P. Balasubramaniam

  3. Pullvizhi Pullvizhi புல்வெளி புல்வெளி

    Sung by K. S. Chithra

  4. Konja Naal Poru கொஞ்சநாள் பொறு தலைவா

    Sung by Hariharan, Sujatha

  5. Shock Adikuthu ஷொக்க் அடிக்குது

    Sung by Pragash, Sujatha, Suresh Peter