Gankai Aatril Song Lyrics

கங்கை ஆற்றில் பாடல் வரிகள்

Aayiram Nilave Vaa (1983)
Movie Name
Aayiram Nilave Vaa (1983) (ஆயிரம் நிலவே வா)
Music
Ilaiyaraaja
Singers
P. Susheela
Lyrics
Gangai Amaran
பெண் : கங்கை ஆற்றில்
நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
கண்ணை மூடி காட்சி தேடி
இன்னும் எங்கே செல்வாள் இவள்
தன்னையே தான் நம்பாது
போவதும் ஏன் பேதை மாது

பெண் : கங்கை ஆற்றில்
நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்

பெண் : பொய் போலவே
வேஷம் மெய் போட்டது
அந்த மெய்யே
பொய்யாய்க் கொண்டாள்
ஓர் ஆயிரம் சாட்சி யார் கூறினும்
அவை எல்லாம் வேஷம் என்றாள்

பெண் : தன் கண் செய்த மாயம்
பெண்மேல் என்ன பாவம்
தன் நெஞ்சோடு தீராத சோகம்
இப்போராட்டம் எப்போது தீரும் இனி

பெண் : கங்கை ஆற்றில்
நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்

பெண் : பொய் மானையே
அன்று மெய் மான் என
அந்த சீதை பேதை ஆனாள்
மெய் மானையே
இன்று பொய் மானென
இந்த கோதை பேதை ஆனாள்

பெண் : பொய் நம்பிக்கை அங்கே
வீண் சந்தேகம் இங்கே
கண் ஒவ்வொன்றும்
வெவ்வேறு பார்வை
என்றாலும் ஏமாற்றம் ஒன்றானது

பெண் : கங்கை ஆற்றில்
நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
கண்ணை மூடி காட்சி தேடி
இன்னும் எங்கே செல்வாள் இவள்
தன்னையே தான் நம்பாது
போவதும் ஏன் பேதை மாது

பெண் : கங்கை ஆற்றில்
நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்