Innoru Vaanam Song Lyrics

இன்னொரு வானம் பாடல் வரிகள்

Netru Indru Naalai (1974)
Movie Name
Netru Indru Naalai (1974) (நேற்று இன்று நாளை)
Music
M. S. Viswanathan
Singers
P. Susheela, S. P. Balasubramaniam
Lyrics
Kannadasan
இன்னொரு வானம் இன்னொரு நிலவு என் முன்னே நின்று
கண்ணால் கொள்ளும் காதல் கனவு
இன்னொரு மேகம் இன்னொரு மின்னல்
நேர்கொண்டதோ எந்தன் நீலக் கண்கள்
இன்னொரு வானம் இன்னொரு நிலவு என் முன்னே நின்று
கண்ணால் கொள்ளும் காதல் கனவு
இன்னொரு மேகம் இன்னொரு மின்னல்
நேர்கொண்டதோ எந்தன் நீலக் கண்கள்


ஓராயிரம் தேன் குடம் ஒன்று சேர்ந்த கன்னம்
ஆ ...ஆ ..ஹோ .
ஓராயிரம் தேன் குடம் ஒன்று சேர்ந்த கன்னம்
நூறாயிரம் நாடகம் ஆடும் பாவை வண்ணம்
ஆ ..ஆ ..அஹ
தேன் என்பதால் செவ்விதழை சேர்ந்து பார்க்க எண்ணும்
நான் தந்ததோ பாதி தான் மீதி உண்டு இன்னும்

இன்னொரு வானம் இன்னொரு நிலவு என் முன்னே நின்று
கண்ணால் கொள்ளும் காதல் கனவு
இன்னொரு மேகம் இன்னொரு மின்னல்
நேர்கொண்டதோ எந்தன் நீலக் கண்கள்


கை பட்ட தேகத்தில் கண் பட்ட நாணத்தை கண்டேன்
அன்பே மை பட்ட கண்ணுக்கு நீ கொண்ட கோலத்தை சொன்னேன்
அன்பே விருந்து கொடுத்து திரும்ப எடுத்து
அருந்தி முடித்த இரவை நினைத்து
ஆடட்டும் பொன் ஊஞ்சல்