Paadum Pothu Naan Song Lyrics

பாடும்போது நான் பாடல் வரிகள்

Netru Indru Naalai (1974)
Movie Name
Netru Indru Naalai (1974) (நேற்று இன்று நாளை)
Music
M. S. Viswanathan
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Pulamaipithan
பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று
நான் வரும்போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன?
பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று



மெல்லிய பூங்கொடி வளைத்து -
மலர் மேனியை கொஞ்சம் அணைத்து
மெல்லிய பூங்கொடி வளைத்து -
மலர் மேனியை கொஞ்சம் அணைத்து
இதழில் தேனைக் குடித்து -
ஒரு இன்ப நாடகம் நடித்து
இதழில் தேனைக் குடித்து -
ஒரு இன்ப நாடகம் நடித்து


எங்கும் பாடும் தென்றல் காற்றும்
நானும் ஒன்றுதானே இன்ப நாளும் இன்றுதானே
பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று

எல்லைகள் இல்லா உலகம் -
என் இதயமும் அதுபோல் நிலவும்
எல்லைகள் இல்லா உலகம் -
என் இதயமும் அதுபோல் நிலவும்
புதுமை உலகம் மலரும் -
நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்
புதுமை உலகம் மலரும் -
நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்

யாரும் வாழ பாடும் காற்றும்
நானும் ஒன்றுதானே -
இன்ப நாளும் இன்று தானே
பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று